எஸ். ராமகிருஷ்ணன் சிறுகதைகளில் சுற்றுச்சூழல் மாசுபாடு
Abstract
நல்ல சூழல் மனிதனை உருவாக்கி மேம்படுத்தக்கூடியதாகும். சங்ககாலத்தில் தமிழர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்வை மேற்கொண்டனர். காலப் போக்கில் அறிவியல் வளர்ச்சி இயற்கையின் வீழ்ச்சிக்கு வித்திட்டது. தற்போது
சுற்றுச்சூழல் நிலைபற்றிச் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் மனித இனம் தள்ளப்பட்டுள்ளது. இன்றைய அவசர உலகில் மனிதர்கள் தங்கள் உடல் நலத்தைப் பேணவும்ஶீ தம் சுற்றத்தாருடன் மனம் விட்டுப் பேசி மகிழவும் போதிய
நேரமிருப்பதில்லை. தமது வாழ்க்கையை இயந்திரமயமானதாக மாற்றிக் கொண்டு விட்டனர். காரணம் இன்றைய உலகின் நாகரீக வாழ்க்கைச் சூழலும் பொருளாதாரத் தேவையும் முக்கியப் பங்கு வகிக்கின்றது. தற்காலத்தில் அவசர வாழ்க்கையின் நிலையையும் அவற்றால் விளைவும் அழிவையும் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் சிறுகதைகள் சமுதாய அவலங்களைச்
சுட்டிக் காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. இவற்றை ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும்
Copyright (c) 2025 ர ஜெயப்பிரியா, மு அனுசுயாதேவி

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.

